புங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் கொட்டதெனிய சிறுமி சேயா உள்ளிட்டவர்களின் பாலியல் கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வலியுறுத்தி கொழும்பு நோக்கிய நடைபயணம் ஒன்று இன்று யாழில் ஆரம்பமாகியுள்ளது
வடமாகாண போக்குவரத்து சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது
குறித்த இரண்டு கொலைகளிற்கான நீதியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் பாலியல் கொலைக்குற்றாவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வலியுறுத்தியும் இந்த நடைபவனி முன்னெடுக்கப்படுகின்றது
ஏ9 பாதையூடாக தொடர்ந்து கொழும்பு நகர் கோக்கி இந்த நடைபயணம் செல்லவுள்ளதாகவும், இடையினில் உள்ள ஒவ்வொரு பஸ் சாலைகளும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் யாழ்ப்பாண டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்
அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொழும்பு நகரை சென்றடைந்ததும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.