ஜேர்மனி நாட்டில் மகள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தவறுதலாக தந்தையை சரமாரியாக சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகரில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 29 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இதே முகாமில் 27 வயதான வாலிபர் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 8 வயதான சிறுமியை அந்த வாலிபர் ஓர் நாள் இரவு ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்று பாலியல் சித்ரவதை செய்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே தெரியவர பொலிசார் உடனடியாக அந்த வாலிபரை கைது செய்தனர்.
வாலிபரின் கைகளில் விலங்கை பூட்டிய பொலிசார் அவரை பொலிஸ் வாகனத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, அங்கு கத்தியுடன் ஓடி வந்த சிறுமியின் தந்தை வாலிபரை கொல்ல விரைந்துள்ளார்.
இதனை பார்த்த பொலிசார் தாக்குதலை தடுக்கும் நோக்கில் தந்தையை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாலிபரை சிறையில் அடைத்த பொலிசார் தந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.