திருகோணமலை – சேருவில பகுதியில் பெண்ணொருவரின் கையை பிடித்து பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இருவர் எதிர்வரும் பத்தாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சேருவில, சுமேதங்கபுர பகுதியை சேர்ந்த 43 மற்றும் 28 வயதுகளையுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் சிவில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
சம்பவம் நடைபெற்ற போது சந்தேகநபர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளதாக தெரியவருகிறது.