இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கல்ஹின்ன மாரப்பன பிரதேசத்தில் உள்ள மடுவம் ஒன்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், காணப்பட்டதாகவும் மரணம் சந்தேகத்திற்குரியது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்ஹின்ன, மாரப்பன பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட வன்னியவத்த தவுல்காரகே அஞ்சன கவிந்து குமார என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரண விசாரணைகளை இரத்தினபுரி நீதவான் நடத்தவுள்ளார்.
சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.