பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழில் அஜித்தின் அசல், விக்ரமின் தூள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கோயினா மித்ரா.
இவர் இன்று மும்பை போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர், ஒரு நபர் கடந்த சில நாட்களாக சில நம்பரில் இருந்து 60 போன் கால்கள் செய்துள்ளார் என்றும், அதில் ஒரு நாள் இரவு கேட்பதாகவும், அதற்கு பணம் தருவதாகவும் கூறுவதாக புகார் அளித்துள்ளார்.
மும்பை போலீசாரும் அவரது புகாரை ஏற்று அந்த போன் நம்பர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.