
சமந்தா
தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வது சீசன் தொடங்கியது. 3-வது சீசனைப்போல் இந்த சீசனையும், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
இதனிடையே வெளிநாட்டில் நடைபெறும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது.
