பின்னர் அங்கிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் அக்கரைபற்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை ஹோமாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை எஸ்.எஸ்.பி ஸானி அபேசேகர கிரித்தலே முகாமுக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தம்முடன் பிரகீத் எக்னெலிகொடவை கடத்துவதில் லெப்டினன்ட் கேனல் அர்ஜூன குமாரரத்ன, லெப்டினன்ட் கேனல் ரவிந்து ரூபசிங்க மற்றும் பரிசோதகர் கனிஸ்க குணரட்ன ஆகியோர் உதவியதாக எஸ்.எஸ்.பி ஸானி குற்ற புலனாய்வு பிரிவினருக்கு சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை கிரித்தலே முகாமில் இருந்து அக்கரைபற்று காட்டு பகுதிக்கு பிரகீத் எக்னெலிகொடைவை அழைத்துசென்ற புலனாய்வு பிரிவினர் இரண்டு நாட்களுக்கு பின்னரே கிரித்தலே முகாமுக்கு திரும்பியதாக எஸ்.எஸ்.பி அபேசேகர தமது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.