பிரகீத் கைதுசெய்யப்பட்டு கிரிதல இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்ட பின்னரே காணாமல் போயுள்ளார்

308

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட கைதுசெய்யப்பட்டு கிரிதல இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததையும் அதன் பின்னரே அவர் காணமற்போனதையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ்பேச்சாளர் ருவான்குணசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கிரிதல இராணுவமுகாமில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்படுகின்ற புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேர் குறிப்பிட்ட முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு சந்தேகநபர்களும் அங்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.
குறிப்பிட்ட முகாமிற்கு அழைத்துசெல்லப்பட்ட சந்தேகநபர்கள் அளித்த வாக்கமூலங்கள் மூலம் பிரகீத் அந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை புலனாகியுள்ளது. அதன் பின்னரே அவர் காணமற்போயுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE