பிரகீத் தொடர்பிலான விசாரணைக்கு இராணுவத்தினரினரின் முழுமையான ஆதரவு

313
காணாமல் போன ஊடகவியலானர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் கிரிதலை இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காக முழுமையான ஆதரவு வழங்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு, இராணுவத் தளபதியினால் குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சந்தேக நபர்கள் 11 பேரை கிரிதலை இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எக்னெலிகொடவை கடத்தி சென்று அவருக்கு மேற்கொள்ளப்பட்டதென்ன என்பது தொடர்பில் தகவல்களை வெளியிடுவதற்கு இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் ஆயத்தமாக உள்ளனர்.

எக்னெலிகொடவை கடத்தி சென்று தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் கிரிதலை இராணுவ முகாமில் சந்தேக நபர்கள் தகவல் வெளியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

1444032411_4069163_hirunews_Eknaligoda

SHARE