பிரதமருக்கு பாராளுமன்றில் எவ்வாறு நடப்பது என்பது தெரியவில்லை – உதயசாந்த குணசேகர

329

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றில் பிரதமருக்கும், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் இந்த வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் பதவி வகி;த்த எந்தவொரு பிரதமரும் இவ்வாறு உறுப்பினர்களை திட்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிப் பற்றி பேசும் பிரதமர் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் சமஸ்டி ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களை திரட்டி அதற்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE