பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

361

 

இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Religious leaders first: Ranil Showwww.sonakar.comMember video

Posted by Sonakar.Com on Friday, August 21, 2015

இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, மஹிந்த அரசினால் கைது செய்யப்பட்டு அவரது உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் மைத்திரி அரசாங்கம் அவருக்கான அனைத்து கௌரவங்களையும் மீள வழங்கி பீல்ட் மார்ஷல் எனும் உயரிய பதவியையும் வழங்கியது.

இந்த நிலையில், இன்று மகிந்த-சரத்பொன்சேகா சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க,

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு, இரு தடவைகள் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்ச இன்று மைத்திரியை சந்தித்து உரையாடியிருந்தார்.

SHARE