பிரதமர் ரணிலுக்கு ஜப்பான் பிரதமர் வழங்கிய இராபோசனம்

335
ஜப்பானுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு இராபோசன விருந்துபசாரத்தை வழங்கியுள்ளார்.

இந்த இராபோசனத்திற்கு முன்னர் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாட்டு உடன்டிக்கை ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.

டோக்கியோவில் உள்ள ஜப்பானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜப்பானிய பாரம்பரிய அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இரு நாடுகளின் பிரதமர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE