பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த விசேட உரையில் பிரதமர் விளக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் தெளிவுபடுத்துவார் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிரதமர் விசேட உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.