பிரதமர் – வடமாகாண முதலமைச்சருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு

263

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

முதல்வருடன் இரண்டு மாகாண அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஏற்கனவே வடக்கின் அபிவிருத்திகள் குறித்து மாகாணசபை உறுப்பினர்கள் யோசனைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே அபிவிருத்திக்கான சிறப்பு ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக்கொண்டு அடுத்துவரும் மாதங்களில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

cv-mavai copy

SHARE