பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் : பிரதமர் தினேஸ் உறுதி

115

 

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பில் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பிலேயே அமைச்சரவை அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த சந்திப்பானது நேற்று முன்தினம்(26.09.2023) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

ஆளுநரின் கோரிக்கைஇச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இச் சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் என ஆளுநர் தெரிவி்த்துள்ளார்.

மேலும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதரிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.இதன் போது ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்,பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

SHARE