பிரபல இயக்குனர் கெளதமன் மீது தாக்குதல்.. தமிழகம் எங்கும் பதற்றமான சூழல்…

263

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு திரைப்பட நடிகரான ஆர்யா, பிரபல இயக்குனர் கெளதமன், இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் முற்றியதால் பொலிசார் தடியடி நடத்தி அங்கு இருந்த மக்களை அப்புறப்படுத்தினர்.
இயக்குனர் கெளதம் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் ஏராளமானோரை பொலிசார் கைது அவர்களை பொலிசார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இப்போராட்டத்திற்கு இடையில் கெளதமன் கூறுகையில், 50,000 ஆண்டுகள் பழமை மிகுந்த எங்கள் தமிழினம், ஏர் தழுவிய தமிழினம், இத்தகைய பெருமை மிகுந்த தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வீரம் போன்றவைகளை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இது ஒரு போதும் நடக்காது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மட்டும் உத்தரவு தரவில்லை எனில் பொதுவாக்கெடுப்பு நடத்தி சட்ட ரீதியாக தமிழ்நாடு தனி நாடாக பிரிய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

SHARE