பிரபல தொகுப்பாளினி மீது வரதட்சணை புகார்

179

பிரபல தொகுப்பாளினி மீது வரதட்சணை புகார் - Cineulagam

வரதட்சணை கொடுமை இல்லாத சீரியல்களை இன்றைய காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நிஜத்திலேயே பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ஸ்ரீவாணி வரதட்சைண புகாரில் சிக்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் இவரின் அண்ணன் பாப்ஜி அண்மையில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் பாப்ஜி மனைவி விக்ராபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீவாணி மீது புகார் அளித்துள்ளார்.

அதில், என் கணவர் இறந்த பிறகு என்னை வீட்டை விட்டு துரத்தும் நோக்கத்துடன் வரதட்சைண கேட்டு கொடுமை படுத்துகிறார். அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE