நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக நல விசயங்களை செய்து வருகிறார். சில கிராமங்களை தத்தெடுத்து தன் சொந்த செலவில் மேம்படுத்தி வருகிறார். சில காலமாக அவர் மத்தியில் ஆளும் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் உத்தர் கன்னடா மாவட்டத்தில் சிர்சி ராகவேந்திரா மடத்தில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட பேசியபோது மத்திய அமைச்சர் ஒருவரை விமர்சித்து பேசியிருந்தார்.
இதனால் அக்கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் மடத்தில் நுழைந்து மாட்டுகறி உண்பவர்களும் கடவுளை விமர்சிப்பவர்களும் புனிதமான இந்த இடத்தில் நுழைந்து விட்டனர் என கூறி பசுவின் கோமியத்தை ஊற்றியுள்ளனர்.