பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி உள்ளது?

360

பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரமளவில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக உயர் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசீம் தாஜூடீன் மரணம் விபத்து அல்ல எனவும், அது படுகொலைச் சம்பவம் எனவும் கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி நீதிமன்றில், புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் கடந்த 28ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

2012ம் ஆண்டு மே மாதம் தாஜுடீனின் சடலம் நாரஹேன்பிட்டியில்  மீட்ப்பட்டிருந்தது.

SHARE