பிரபாகரன் தனது தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையின் மூலமே உருவாக்கியிருந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பை!

361
பிரபாகரன் தனது தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையின் மூலமே உருவாக்கியிருந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பை!

 

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறங்கியுள்ள துரோகக் கும்பல்களும் ஒட்டுக்குழுக்களும் துணிச்சல் மிக்க தமிழ் தேசிய அரசியல் தலைவரான சிறீதரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றிவிடவேண்டும், தமிழ் தேசியத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்ற சதித்திட்டங்களின் அடிப்படையில் சிறீதரன் மீது பொய்யான அபாண்டமான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறி பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதாக உணர்வுகொண்ட தமிழர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவல யுத்தங்களைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் தமிழர்களை என்னவும் செய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. அதனால்தான் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது நிராயுதபாணியாகப் பிடிக்கப்பட்டவர்களையும் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களையும் சிறீலங்காப் படைகள் துடிக்கத்துடிக்க பாலியல் வல்லுறவக்குட்படுத்தியும் சித்திரவதைசெய்தும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறியாட்டமாடினார்கள். ஏதுமறியா அப்பாவிகள் பலரைக் கடத்திக் காணாமல் போகச் செய்தார்கள், அனைத்தையும் இழந்து நின்ற அப்பாவி மக்களை முள்வேலி முகாம்களில் அடைத்தார்கள், தொடர்ந்தும் இளைஞர் யுவதிகளை விசாரணை என்று அழைத்து மிரட்டி அடக்கி ஒடுக்கி வந்தார்கள். தமிழர்களின் சொத்துக்களை அபகரித்தார்கள், தமிழர் பூர்வீக நிலங்களை அபகரித்து ஏதிலிகளாக அலையவிட்டார்கள் என இப்படியாக இன்னுமின்னும் பல சொல்லில் அடக்க முடியாத அநியாயங்களையும் அடக்குமுறைகளையும் தமிழர்கள் மீது ராஜபக்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டபோது இவற்றையெல்லாம் ஏற்று ஆதரவளித்து ஒத்தாசை புரிந்துவந்த தமிழினத்துரோக ஒட்டுக்குழுக்கள் மகிந்தராஜபக்ஷ போட்ட எலும்புத்துண்டைக் கௌவிக்கொண்டு அவற்றையெல்லாம் சரியென கூறிக்கொண்டு அவர்போட்ட எலும்புத்துண்டுக்காக வாலாட்டிக்கொண்டு தமிழர்களை வதைத்து வந்தார்கள்.

அப்போது தமிழ் மக்கள் மீது மகிந்தராஜபக்ஷவினால் செய்யப்பட்ட அநீதிகளையும் அடாவடிகளையும் ஏற்று அவற்றுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு தமிழ் மக்களைக் கொண்றொழிப்பதற்கு துணைபுரிந்த ஒட்டுக்குழுக்களும் துரோகக் கும்பல்களும் மகிந்தராஜபக்ஷவின் பலம் குன்றிய இக்காலகட்டத்தில் பேரினவாதிகளால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தாம்தான் தமிழ் மக்களுக்காக எப்போதும் போராடி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்ததாகக் கூறிக்கொண்டு தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்காக தமது இருப்புக்காக இந்தத் தேர்தலில் தமிழ் மக்களிடம் சென்று வாக்குப் பிச்சை கேட்கின்றார்கள். கடந்த தேர்தல்களின்போது தமிழ் மக்களால் நிராகரித்துத் தூக்கி வீசப்பட்ட இவர்கள் இப்போது புதுக் கதை கூறிக்கொண்டு வந்து மக்களைக் குழப்பி தமிழர்களின் வாக்குக்களை அபகரித்துவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்;டபோதும் தமிழ் மக்கள் மீது அடாவடிகள் அடக்குமுறைகள் அநியாயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளைகளிலெல்லாம் தமிழ் மக்களோடு கூட இருந்து அவற்றுக்கெதிராகக் குரல்கொடுத்து பல அச்சுறுத்தல்களையும் இழப்புக்களையும் சந்தித்த தமிழ் மக்களின் ஒரேயொரு அரசியல் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமேதான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் சக்தியை தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெண்றெடுப்பதற்காக தனது தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையின் மூலமே உருவாக்கியிருந்தார். அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு தமிழ் தேசியத்தின் பலத்திற்காக அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்களித்து பெரும் ஆதரவளித்து வருகின்றார்கள். இதனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழர்களின் மக்கள் பலம் பொருந்திய சக்தி தமிழர் மனங்களில் நீக்கமற நிலைத்துள்ளது என்பதே உண்மை. இதனைக் கண்டு பேரினவாதிகள் கதிகலங்கி நிற்கிறார்கள். சர்வதேசம் தமிழர்களின் விடுதலைக்கான பயணத்தை ஏற்றுக்கொண்டு தமிழர்களுக்கு நீதிவேண்டும் தீர்வு வேண்டும் என்பதற்காக ஐ.நா.சபைவரை தமிழர்களின் கதைதான் பெரிதாகப் பேசப்படுகின்றது. இதற்கெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணிச்சல்மிகு அறிவுபூர்வமான இராஜதந்திர அணுகுமுறைகளேதான் காரணம்.

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குக்களை அபகரித்து அதிகாரத்திலிருந்து பேரினவாதிகளுக்கு வாலாட்டிக்கொண்டு தமிழ் மக்களை அடக்கி ஆளலாம் என்ற எண்ணத்துடன் இருந்த ஒடடுக்குழுக்களும் துரோகக் கும்பல்களும் தமிழ் மக்களால் இனங்காணப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாது அழித்தொழிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது உண்மைக்குப் புறம்பான பொய்களை நன்கு திட்டமிட்டு உருவாக்கி உளவியல் ரீதியாகவும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மூலமாகவும் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தமிழ் மக்களை உளவியல் ரீதியாக நம்பவைக்கும் முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுவருபவர்கள் யார்யார் என்று நோக்கினால் உண்மை நிலை தெரியும். இவர்கள் கடந்தகாலத்தில் எப்படிச் செயற்பட்டு எமது இனத்தைக் காட்டிக்கொடுத்து அழித்தார்கள் என்ற உண்மை புரியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் கொள்கைப் பற்றுறுதி மிக்க துணிச்சல் மிகு தலைவர்களை அகற்றிவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலகுவில் சிதைத்தழித்தொழித்துவிடலாம் என்ற திட்டமிட்ட துரோக நோக்கத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தன்மானத்துடன் தமிழர்களின் விடியலுக்காக என்றென்றும் உழைத்துவரும் தமிழ் தேசிய அரசியல் தலைவரகள் மீது அபாண்டமான பொய்ப்பரப்புரைகளைச் செய்து தமிழினத்தை அடகுவைத்து தமது இலக்கை அடைந்துவிடத் துடிக்கிறார்கள். அந்தவகையில்தான் தமிழ் தேசியக் கூட்மைப்பில் துணிச்சல்மிக்க நாவன்மைமிக்க ஆளுமைப் பண்புகள் நிரம்பப்பெற்ற இளம் அரசியல் தலைவராகக் காணப்படும் சிவஞானம் சிறீதரனை தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிறீதரனுக்கு எதிரான பல்வேறுபட்ட கொலைமிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அவரது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான மிகவும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளும் அபாண்டமான பொய்ப்பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதனை அனைவரும் அறிவார்கள். இந்தச் செயற்பாடுகள் வடக்கின் பல இடங்களிலும் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் ஆத்திரம்கொண்ட மக்களால் அவர்களை ஓடஓட விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களால் எப்பவோ நிராகரிக்கப்பட்டவர்களால் சிறீதரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை சில இணையத்தளங்ளினூடாகவும் முகப்புத்தகஙகளினூடாகவும் முன்னெடுத்;து வருகின்றார்கள். அப்படிச் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மைகள் வெளிப்படும். கிளிநொச்சி மாவட்டத்தில் பல சங்கரிகள் சேர்ந்து பல்வேறுவிதமான பொய்யான சங்கதிகளைப் பரப்பி வருகின்றார்கள். இவர்கள்தான் இப்போது விடுதலைப் புலிகளுக்கு தாம் ஆதரவாக இரங்குவதுபோலக் காட்டிக்கொண்டு சிறீதரனை விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றும் பொய்ப்பரப்புரை செய்யும் இறுதி முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் யாருடைய பின்னணியுடன் யாரது பலத்துடன் யாரது கைக்கூலிகளாகச் செயற்படுகின்றார்கள், இவர்கள் எவ்வாறெல்லாம் எம்மினத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்று தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படியான பல்வேறுபட்ட துரோகத்தனங்களையும் அவதூறுப் பரப்புரைகளையும் எம் தமிழினம் கடந்தகாலங்களில் எதிர்கொண்டு மக்கள் சக்தியால் வெற்றிபெற்ற சம்பவங்களே அதிகம். தமிழர்களின் பலம்மிக்க அரசியல் சக்தியாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் துணிச்சல் மிக்க இளம் அரசியல் தலைவர் சிவஞானம் சிறீதரனின் குரல் தமிழர்களின் விடிவுக்காக என்றென்றும் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றேதான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலைத்திருந்து தமிழர்களின் விடிவுக்காக உளபூர்வமாக உழைக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுறுதிகொண்ட தலைவர்களை தமிழர் அரசியல் அரங்கிலிருந்து இல்லாமல் செய்து தமிழர்களின் அரசியல் பலத்தை அழித்தொழிப்பதன் மூலமே தமிழர்களை அடிமைப்படுத்தி தமது நிலைத்திருப்பையும் சுகபோகங்களையும் கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற கபட நோக்கத்துடன் துரோகக் கும்பல்களும் ஒட்டுக்குழுக்களும் தமிழ் தேசியத்தின் மீது தாமேதான் உண்மையான பற்றுக்கொண்டவர்கள் போல நாடகமாடி வருகின்றார்கள். சொல்லில் அடக்கிவிடமுடியாத தியாகங்களையும் கொடைகளையும் அர்ப்பணிப்புக்களையும் தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக வழங்கிய தமிழினம் இவர்களின் மாயைகளை இலகுவாக அடையாளங்கண்டுள்ளது என்பதே உண்மை. இதனால் பல இடங்களில் மக்களைக் குழப்புவதற்காக முயற்சித்த தமிழினத் துரோகக் கும்பல்கள் உணர்வுகொண்ட தமிழ் உறவுகளால் இனங்காணப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்குக்கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் மக்கள் பலம் மிக்க வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் வெற்றியாகவே நோக்கப்படுகின்றது. அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமது அரசியல் பலத்தை வெளிக்காட்டுவதற்காக தமிழர்களின் பலம் பொருந்திய தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக மாவீரர்களின் கனவை மனதிலே சுமந்து தமிழின விடுதலைக்குப் பலம் சேர்ப்பதற்காக சபதமெடுத்து தயாராகியுள்ளார்கள்.

-தாயக விடுதலைவிரும்பி-

pirapaharan_sritharan

– See more at: http://www.asrilanka.com/2015/08/13/29658#sthash.UQX5k08f.dpuf

SHARE