சூர்யா நடிப்பில் நாளை உலகம் முழுவதும் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது.
முன்பதிவு ஆரம்பித்த, சில மணி நேரங்களிலேயே பல காட்சிகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் அப்படி என்ன இருக்கின்றது என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.
முதலில் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதாலே பாதி எதிர்ப்பார்ப்பு படத்தின் டீசரே ஏற்படுத்தியது. அதிலும் பல ஹாலிவுட் படத்தில் பார்த்த டைம் மிஷின் பற்றிய படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் வருகின்றது.
இதுமட்டுமின்றி இயக்குனர் விக்ரம் குமார் திரைக்கதையில் புகுந்து விளையாடக்கூடியவர், ஏற்கனவே 13பி, மனம் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே வரிசையில் இந்த 24 படத்தின் திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், ஏ.ஆர்.ரகுமான், திரு போன்ற முன்னணி டெக்னிஷன்கள் பணியாற்றியிருப்பது கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக சூர்யாவிற்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கும் இந்த 24 ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.