பிரஸெல்ஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தீவிரவாதி சலாஹ் அப்தெசலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாயன்று பிரசெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சலாஜ் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதால் அவருக்கு இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொலிசார் கருதி வருகின்றனர். இந்நிலையில், பிரஸெல்ஸ் தாக்குதல் குறித்து சிறையில் உள்ள சலா அப்தெசலமுக்கு எதுவும் தெரியாது என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவரது வழக்கறிஞர் ஸ்வென் மேரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்த தாக்குதல் குறித்து அப்தெசலமிடம் கேட்கப்பட்டது. அப்தெசலம் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். விசாரணைக்காக பிரான்ஸ் திரும்ப விருப்பமாக உள்ளார். அப்தெசலம் பெல்ஜியம் போலீசாருடம் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. பிரஸெல்ஸ் தீவிரவாத வெடிகுண்டு தக்குதலுக்கான திட்டங்கள் குறித்து அப்தெசலமுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். |