பிரான்ஸின் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

181

mythiribala

பிரான்ஸில் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயம் தகவல்களை சேகரித்து வருவதாக பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE