பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.