பிறர் கண் பட்டதால் திருஷ்டி என வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்த நவீன காலத்திலும் இதை நம்பவேண்டுமா என எண்ணுபவர்கள் உண்டு. கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
அதாவது, ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள்.
அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
இதேவேளை, பிறர் கண்களால் கண்டு நம் மீது பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்.
ஆகவே, இந்த கண் திருஷ்டியை எப்படி காலங்காலமாக நம்மவர்கள் கழிக்கிறார்கள் என்று சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
எளிய பரிகாரங்கள் 5
01. கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் இடுதல்.
02. சிறு குழந்தைகளுக்கு துணியால் திரி செய்து, திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடுதல்.
03. வீட்டில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போடுதல். (செவ்வாய் அல்லது ஞாயிறு தினங்களில் நலம்)
04. வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி அல்லது கற்றாழை கட்டி தொங்கவிடுதல்.வாசலுக்கு மேல், ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடுதல் (செவ்வாய்க்கிழமை உத்தமம்).
05. குழந்தைகளின் கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்தல். பெரியவர்கள் நெற்றியில் கறுப்பு பொட்டு சிறிது வைத்தல். (ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நெய்யில் கலந்து கறுப்பு பொட்டாக இட்டுக்கொள்வது நன்மை).