பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் நீடிப்பு

235

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதனால் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நிதவானிடம் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியல் உத்தரவினை நீடித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்காக சென்றிருந்த போது பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

SHARE