கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் குழுவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 9.30 அளவில் கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் மண்டபத்தை விட்டு வெளியில் வந்த போது பிள்ளையான் குழுவால் கடத்தி செல்லப்பட்டார்.
இவர் பின்னர் படுகொலை செய்யப்பட்டு அவரின் உடலை அடையாளம் காணமுடியாதவாறு மறைத்து விட்டனர்.
அரச படைகளுடன் இணைந்து செயல்பட்ட பிள்ளையானின் ஆயுதக்குழுவே அவரை கடத்தி படுகொலை செய்த விடயம் அறியப்பட்ட போதிலும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இன்று நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வில் கிழக்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கம், கிழக்கு பல்கலைக் கழக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் சங்கம், பல்கலைக் கழக கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் பல்கலைக்கழக சமூகத்தினால் பல்கலைக் கழக நுழைவாயிலில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதுத பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பிள்ளையான் ஹிஸ்புல்லா ஆகியோரின் கைபொம்மையாக செயல்பட்டவரும், அடாவடி பிக்கு சுமணதேரரின் காதலியுமான திருமதி சாள்சிடம் மகஜர் ஒன்றும்