புகையிலை செய்கை விரைவில் ரத்து செய்யப்படும்! அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

277
புகையிலை செய்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவது தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக நோய்களுக்கு இரசாயன உரங்களும், மருந்துகளும் விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்துவது முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளை இயற்கை முறையில் பயிர்ச் செய்கையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

download

SHARE