புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது: மஹிந்த

275
புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல சப்புகஸ்கந்தவில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சினால் எல்லோரும் ஒன்றிணைந்து அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட முடியும்.

எனது ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் உரிய தேர்தல்களை நடாத்தியிருந்தேன். வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூட உரிய நேரத்தில் தேர்தல் நடத்தியிருந்தேன்.

எனினும் இந்த அரசாங்கம் அவ்வாறு தேர்தலை எதிர்நோக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மக்களிடம் இப்போது பணமில்லை. நாம் நாட்டை அபிவிருத்தி செய்தோம். எதற்காக பெருந்தெருக்கள் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.

இந்த திட்டங்களின் ஊடாக நாட்டுக்கு பணம் கிடைத்தது. தற்போது பணமில்லை. இதனால் நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினதும் சுதந்திரக் கட்சியினதும் ஜாதகங்கள் பொருந்தவில்லை.

இரண்டு தலைவர்கள் இருக்கின்றார்கள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahinda_rajapaksa

SHARE