புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக உள்ளடக்கப்படும் – சுமந்திரன்mp

318

 

ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றி புதியதொரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுவதற்கான பொறிமுறையினை ஆரம்பிக்கவுள்ளார். அதனுடாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக உள்ளடக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

sumanthiran_CI

தமிழ் மக்கள் பேரவை பற்றிய கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நடைபெற்றது. இதன்போது 2016ஆம் ஆண்டு பிறக்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

 

SHARE