புதிய காதல் தொடர்பால் யுவதி கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்!

261

நேற்றைய தினம் பசறை, மவுசாகலையைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்த தனது 22 வயது புதிய காதலருடன் சேர்ந்து பதுளை,உத்ஹித்த பூங்காவில் அமர்ந்திருக்கும் போது அங்க வருகைத் தந்த இளைஞர் ஒருவர் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து , பூங்காவின் காவலாளிகள்  இந்த இளைஞனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன்,குறித்த  இளைஞனின் கையிலிருந்து விஷ மருந்து போத்தல் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கத்திக்குத்துக்கு உள்ளான இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த யுவதி பட்டதாரி என்பதோடு, தாக்குதலை மேற்கொண்ட நபரும் ஒரு பட்டதாரி மாணவர் என்பத குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த இளைஞனுடனான காதலை யுவதியின் பெற்றோர் எதிர்த்தமையினால் இந்த யுவதி குறித்த இளைஞருடனான காதல் தொடர்பை முறித்துக் கொண்டு புதிய காதல் தொடர்பினை பேணிவந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இந்தத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

201503280025299475_Love-Issue-Young-men-Knife_SECVPF
SHARE