ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது நடிகை குஷ்புவிற்கு தான். அவரது பெயரில் குஷ்பு இட்லீ என்பது கூட பிரபலம் ஆனது.
இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள். அதில் ஒருவரான அனந்திதா ஒரு புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதாவது Anmol என்ற பெயரில் ஒரு புதிய சமூக வலைதளம் உருவாக்கியுள்ளார்.
அது பெண்கள் முக அழகுக்கு பயன்படுத்தும் கிரீம் பற்றிய ஒரு வலைதளமாம். இந்த தகவலை குஷ்பு டுவிட்டரில் தெரிவிக்க பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.