புதிய சாதனை படைக்கப் போகும் “சிக்சர் மன்னன்” கிறிஸ் கெய்ல்

250
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இன்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறார்.உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் அதிரடியில் கலக்க ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் கெய்ல், 2 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

SHARE