புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று கூடிய அரசியலமைப்புச் சபையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய கணக்காய்வாளர் நாயகமாக சுலோ விக்ரமரட்ணவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.