.
புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.
இராதாகிருஸ்ணன் இன்று (23.6) திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிரு;த புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு
அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் இத் தொழில்நுட்ப ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இசுறு பாடசாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலை கட்டிடத்தொகுதியையும் அமைச்சர் திறந்து
வைத்திருந்தார்.
பாடசாலை அதிபர் த. அமிர்தலிங்கம் தலைமயில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் இ.
இந்திரராஜா, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் உட்பட
பலரும் கலந்துகொண்டிருந்தனர்.