புத்தளம் கல்பிட்டி, கப்பலடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை வைத்திருந்த ஐந்து பேரை, இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (09) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 950 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவை சுமார் 10 மில்லியன் பெறுமதியானவை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவை, இந்தியாவிலிருந்து சிறிய மீன்பிடிப்படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கடலட்டைகளும் கைது செய்யப்பட்டவர்களும் புத்தளம் கடற்றொழில் அலுவலக பரிசோதகர்களிடம் ஒப்படைக்
கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.