புத்தளம் பாடசாலை இடிந்து விழுந்தது..! மயிரிழையில் உயிர் தப்பிய பிள்ளைகள்.

297

Putalim-01

 

புத்தளம் தம்பபண்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் ஓலை வகுப்பறையொன்று கடந்த வியாழன் காலை இடிந்து விழுந்தது.

ஓலைவகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்றுக்கொண்டிருந்த நிலையிலே இது இடிந்துவிழுந்துள்ளது. இதன் போது சிக்கி கொண்ட மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுக்கப்பட்டார்கள்.

இவ்வனர்த்தம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் “இவ்வோலை கூடாரம் பற்றி நான் உரிய அதிகாரிகளிடம் பல தடவை தெரிவித்துள்ள போதும் இது பற்றி அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது தொடர்பாக இனிவரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளாது போனால் சட்டத்தை நாடவுள்ளதாகவும்” கருத்து தெரிவித்தார் .

“கல்வி பயிலும் இப்பிரதேச பிள்ளைகளின் நலன் கருதியும், அடைமழை காலத்தில் இவ்வாறன அசம்பாவிதங்கள் ஏற்படாது அவை சீரான முறையில் செவ்வனே செப்பனிடப்படுத்துவதற்காகவும் நலன்விரும்பிகள் உங்கள் உதவிகளை எங்களுக்கு வழங்க முடியும்” எனவும் மேலும் தெரிவித்தார்.

SHARE