புலம்பெயர் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

213

புலம்பெயர் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவிருந்த விசேட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் வாழ் இலங்கையர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்இ இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிப்பனை பெற்றுக் கொள்ளவும் இந்த ஆண்டின் இறுதியில் புலம்பெயர் நிகழ்வு ஒன்று நடத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வு புலம்பெயர் இலங்கையர்களின் திறமைகளையும் அவர்களின் நிபுணத்துவத்தையும் இலங்கை வாழ் மக்களுக்கு பயனுடைதாக்கும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்விற்கு சிங்கள தேசியவாத கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE