சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்ஷான் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரது மகன் ரேசாந்து கிரிக்கெட்டுக்கு அடித்தளமிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பான பங்களிப்பு அளித்த டில்ஷான், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் அவரது மகனான ரேசாந்து திலகரட்ன 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை எடுத்து அசத்தியுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலே அதிரடி காட்டியுள்ளார்.
இந்ந நிலையில் ரேசாந்து திலகரட்னவின் திறமையை, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.