புலி படம் வருவதற்குள்ளேயே பல பிரச்சனைகளை சந்தித்து விட்டது, டீசரை யாரோ எடுத்து வெளியிட, பின் அவரை கண்டுப்பிடித்து காவல்த்துறை கைது செய்தது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது சிம்புதேவனுக்கு ஒரு டிசைனர் மீதே சந்தேகம் வந்துள்ளதாம், ஏனென்றால், முதலில் அந்த டிசைனரிடம் தான் பணியை கொடுத்தார்களாம், பின் ஏதோ காரணத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற, இவர் தான் புலி புகைப்படத்தை வெளியே விட்டிருக்க வேண்டும் என அவர் நினைத்துள்ளார்.
ஆனால், நெருங்கிய வட்டாரங்கள் பலரும் அவர் தங்கமான மனிதர், அப்படி செய்ய வாய்ப்பே இல்லை, இவர் தான் ஏதோ கோபத்தில் பேசுகிறார் என கூறி வருகின்றனர்.