புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

107

 

தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினரின் வீதிச் சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணை
இதன்போது 7 எருமை மாடுகளை ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட கப்ரக வாகனமும் அதன் வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கால்நடை கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியர் சான்றிதழ் இன்மை மற்றும் வாகனத்தில் கால்நடைகள் ஏற்று செல்லக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களுக்காக இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, எழு கால்நடைகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம்(21)கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE