புளுவேல் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த்

109
கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள் - ஸ்ரீகாந்த்

பூர்ணா, மாஸ்டர் கபீஷ் கன்னா, பிர்லா போஸ், திவ்யா, பொன்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புளுவேல். புளுவேல் என்ற விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள்ளார்.
இந்த படத்தின் இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது:- ‘ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஸ்ரீகாந்த்கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள், கதையை நம்பி படமெடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக் குறை கூறக்கூடாது. சினிமாவை சரிசெய்தால் தான் மக்கள் ஆர்வத்தோடு வருவார்கள். மக்களை கட்டாயப்படுத்த முடியாது. பிடித்திருந்தால் அவர்களே வந்து பார்ப்பார்கள். ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது, திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஒரு படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை போடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்களை குறைகூறுவது சரியல்ல. நம்முடைய துரதிர்ஷ்டம்’. இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார்.
SHARE