ஐ.பி.எல். போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் நேற்றைய பெங்களூர் அணி வீரர்கள் மெதுவாக பந்து வீசினர். 20 ஓவரை அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் வீச முடியவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டனர்.
இதற்காக பெங்களூர் அணி கேப்டன் டுபெலிசுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல லக்னோ அணி வீரர் அவேஷ் கான் நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.
வெற்றி பெற்றதும் அவர் ஹெல்மட்டை மைதானத்தில் வீசினார். இதற்காக அவர் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளார்.
maalaimalar