பெட்ரோல் நிரப்பும்போது காருக்குள் பரவிய தீ: குழந்தையை காப்பாற்ற போராடிய தாய்

206

625.500.560.350.160.300.053.800.748.160.70

மலேசியா நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்ட காருக்குள் திடீரென தீ பரவியதை தொடர்ந்து காருக்குள் இருந்த குழந்தையை காப்பாற்ற தாய் போராடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.

காரின் பின் இருக்கையில் அவரது குழந்தை இருந்துள்ளது. பெண் காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டுருந்த வேளையில் திடீரென காருக்குள் தீ விபத்து ஏற்பட்டு கார் முழுவதும் பரவியுள்ளது.

விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், உள்ளே இருந்த தனது குழந்தையை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடியுள்ளார்.

பின்னர், நின்ற இடத்திற்கே திரும்பி வந்த அவர் கார் கதவு வழியாக குழந்தையை வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில், விரைந்து செயல்பட்ட பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தீயை அணைக்கும் புகையை செலுத்தி பெரும் விபத்தினை தடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய குழந்தை சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிரப்பும்போது தாயார் செல்போன் பயன்படுத்தினாரா? அல்லது காருக்குள் இருந்த குழந்தை செல்போனை பயன்படுத்தியதால் இந்த தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE