பெண்களை காப்பது நமது கடமை: டோனி

285

 

ஒவ்வொரு பெண்களையும், சிறுமிகளையும் காப்பது நமது கடமை என இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே இதனை தடுக்கும் விதமாக ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனமொன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது கிரிக்கெட் பிரபலங்களை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மக்களை எளிதில் சென்றடைய முடியும் என யோசித்தது.

இதனையடுத்து மகேந்திர சிங் டோனியை வைத்து பெண்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய டோனி, பெண்களை மதிக்க வேண்டும், பெண்களை பாதுகாக்க வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகளை காப்பது நமது கடமை என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக குறித்த நிறுவனம் வீராட் கோஹ்லி, ரெய்னா, ரவிசாஸ்திரி, அம்பதிராயுடு ஆகியோரை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE