கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் திருகோணமலை விஜயபாகு பாபல ரெஜிமென்துவ எனும் படைப்பிரிவில் கடமையாற்றும் டபிள்யூ.எஸ்விக்ரமசிங்ஹ (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கந்தளாய் – சர்வோதயத்திற்கு அருகில் வசித்து வரும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர், திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, தன் அருகில் குறித்த இராணுவ சிப்பாய் உட்கார்ந்து வந்ததாகவும் அவ்வேளை இராணுவ சிப்பாய் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாகவும் தெரிவித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கந்தளாய் பொலிஸார் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாகவும் இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.