பெரஹெரவில் யானை குழம்பியதில் பெண் மரணம்! 12 பேர் காயம்!

239

 

இரத்தினபுரி மஹா சமன் ஆலயத்தின் பெரஹெரவில் பங்கேற்ற யானை ஒன்று வெருண்டு குழம்பியதில் பெண் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கெட்டபெர விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலத்தில் நடந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு பெரஹெர ஆரம்பமாகி சற்று நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெரஹெர ஊர்வலத்தில் செல்லும் யானை ஒன்று வெருண்டு குழம்பியுள்ளதாக பரவி வதந்தியை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

பெரஹெரவில் கலந்து கொண்ட மக்கள் நாலா புறமும் சிதறி ஓடிய போது ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதாக வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர்.

SHARE