நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.
1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.
அவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டுமென அரவிந்த குமார் கோரியுள்ளார்.