வட்டக்கச்சி, இராமநாதபுரம் மற்றும் கல்மடு நகர் போன்ற பகுதிகளில் தற்பொழுது நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கங்களை ஆராய்வதற்கான கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் சூரியகுமார் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்பொழுது அநேகமான பகுதிகளில் கிரிமினசினி விற்பனை நிலையங்களில் காலாவதியான கிருமி நாசினிகளை பல பகுதிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதனை அவதானிக்காத சில விவசாயிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த விடயமும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் கிருமி நாசினிகளில் ஒட்டப்பட்டுள்ள காலாவதி திகதிகளை சரியாக உறுதி செய்த பின்னர் தங்களது பயன்பாட்டிற்கு கொள்வனவு செய்யுமாறு கோரியுள்ளனர்.
அத்துடன் நோய் தாக்கங்கள் ஏற்படும் பொழுது அருகில் உள்ள கமநலசேவை விவசாய போதனை ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தற்பொழுது நோய் தாக்கமானது கிளிநொச்சி மாவட்டத்தில் 8,000 ஹெக்டர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாள் சூரியகுமார் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.