பெற்றோர் திட்டியதால் 12 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு.

126

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வில் தோட்டத்தை சேர்ந்த 7 வயது பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

தலவாகலை தமிழ் மகா வித்தியலயத்தில் தரம் 7 கல்வி பயிலும் 12 வயதுடைய டி.சதீஸ்வரன் என்ற மாணவரே
இன்று (27.03.2017) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (26.03.2018) குறித்த சிறுவனின் பெற்றோரினால் சம்பவமொன்றிகாக திட்டிய நிலையில் இன்று காலை பாடசாலை சீருடையணிந்த நிலையில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள அறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் சடலம் மரண பரிசோதணைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் லிந்துல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE